ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு கேட்ச் பிடித்த இரு வீரர்கள்..


  • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்  புனேவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
  • இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ஜார்ஜ் பெய்லி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் 24 ரன் எடுத்திருந்த போது பந்தை சிக்சர் நோக்கி அடித்தார். பந்தும் பவுண்டரி எல்லையை கடக்க போகும் சமயத்தில் டிம் சவுத்தி மிக அபாரமாக பந்தை தடுத்து எல்லைக் கோட்டுக்குள் அந்தரத்தில் தள்ளி விட்டார். 
  • அப்போது டிம் சவுத்தி பின்னாலயே ஓடி வந்து கொண்டிருந்த கருண் நாயர், மிக அழகாக பந்தை கேட்ச் பிடித்தார். 
  • பெய்லியின் அவுட்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த கேட்ச் இதுதான்...!!


0 Comment "ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு கேட்ச் பிடித்த இரு வீரர்கள்.."

Post a Comment