லண்டனையில் மிதக்கும் வீடு


  • லண்டனைச் சேர்ந்த மார்காட் கடலுக்கு மத்தியில் பிரம்மாண்டமான ஒரு வீட்டை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
  • அதற்கு “நீர்மின் சக்தி அலை வீடு” எனப் பெயர் சூட்டியுள்ளார். ராட்சத கடல் கிளிஞ்சல் போன்ற தோற்றம் கொண்ட இந்தக் கட்டிடம் கடல் மேல் மிதந்தபடி கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரித்து அவ்வீட்டுக்குத் தேவையான மினசாரத்தை வழங்கும். 
  • தற்போது அவர் திட்டமிட்டிருக்கும் இந்த நீர்மின் சக்தி அலை வீடு இரண்டு அடுக்குகளைக் கொண்டிருக்கும். ஒன்று உட்புறத்திலும், மற்றொன்று வெளிப்புறத்திலும் இருக்கும். கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வெளிப்புறக் கட்டிடம் நிலையாக வீற்றிருக்கும். அதுதான் குடியிருக்கும் பகுதி. அப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும்.
  • உட்புற அடுக்கு அலுமினியம் கொண்டு கட்டப்படும். இது சுழலும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆழ்கடல் அலையின் நகர்வுக்கு ஏற்ப இப்பகுதி அசையும். இவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்திரங்கள் (turbine) பொருத்தப்படும். அவற்றில் ஒன்று அலைகளுக்கு எதிர்வினையாற்றும்.

  • அதாவது அலையில் உண்டாகும் காற்றை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும். மற்றொன்று காந்தம் மற்றும் தாமிரம் கம்பிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதுவும் மின்சாரம் உற்பத்தி செய்யும்.


0 Comment "லண்டனையில் மிதக்கும் வீடு"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)