தர்மபுரியில் 144 தடை!!!


கடந்த 2012ல் இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி  நத்தம்  காலனியில் கலவரம் ஏற்பட் டது. இந்நிலையில்கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து ஓராண்டு  முடிவடைய உள்ள நிலையில், இளவரசன் நினைவு தினத்தை  அனுசரிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் மற்றும்  அமைதி கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர்இதனிடையே, தர்மபுரி  தாலுகா பகுதியில்  நேற்று முன்தினம் நள்ளிரவு  முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comment "தர்மபுரியில் 144 தடை!!!"

Post a Comment