பாலியல் தொல்லை கொடுத்தாக பிரீத்தி ஜிந்தா புகார்

நடிகை பிரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரு உரிமையாளராக உள்ளார். அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் மற்றொரு உரிமையாளராக இருந்து வருகிறார்கள். ஜிந்தா பஞ்சாப் அணி இடம் பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் அணியின் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம் அடைய செய்வார். இந்நிலையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அணியின் மற்றொரு உரிமையாளர் நெஸ் வாடியா மீது புகார் கொடுத்துள்ளார். 
கடைசியாக நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு தந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெஸ் வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் மிரட்டினார் என்றும் ஜிந்தா தெரிவித்துள்ளார்.  ஜிந்தாவின் புகாரை ஏற்றுக் கொண்டு போலீசார் நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். 
முன்னதாக ஏன் இவ்வளவு நாட்களாக ஜிந்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறித்தான கேள்விக்கு போலீஸ் அதிகாரி பதில் அளித்தார். சம்பவம் நடந்ததை அடுத்து ஜிந்தா நகரின் வெளியே போக வேண்டியிருந்தது எனவே அவர் முன்னதாக புகார் அளிக்கவில்லை. அவர் எப்போது திரும்பி வந்தாரோ அப்போது தனது புகாரை அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 Comment "பாலியல் தொல்லை கொடுத்தாக பிரீத்தி ஜிந்தா புகார்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)