உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான
20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு
11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது.
32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32
நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே.
4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை
19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட
32 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும் மீறி உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் செய்துள்ளது. புதிய மைதானம் அமைப்பது, பாதுகாப்பு வசதிகள் என ரூ.84
ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது.
64 ஆண்டுக்கு பிறகு பிரேசில் நாட்டில் 2வது முறையாக உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் அந்த நாட்டின் குக்கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம்"
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.