கால்¬பந்து வீரர் செரி டெய் தேசிய கீதத்தை கேட்டவுடன் அப்படியே அழுகை !!

உல­கில் அதி­ ரசி­கர்­களை கொண்ட கால்­பந்து போட்டிகளில் பொதுவாக பெரிய தொடர்களில் சாதிக்கும் போது அல்லது தோல்வியடையும் போது வீரர்கள் உணர்ச்சியை கட்­டுப்­­­டுத்த முடி­யாமல் அழுது விடுவர்.இது சகஜ­ம். இப்போது நடப்பது உலக கோப்பை போட்டி. இதில் பல வீரர்கள் முதன் முறையாக பங்கேற்கின்றனர். வீரர்கள் களத்தில் தேசிய கீதத்தை கேட்டவுடன் அப்படியே  அழுகை வந்து விடுகிறது. இப்படித்தான், மெக்­சி­கோ­வுக்கு எதி­ராக சமீ­பத்தில் நடந்த லீக் போட்­டியில் தேசிய கீதத்தை கேட்டு கண் கலங்கினார் நெய்மர்.இதேபோல கொலம்­பி­யா­வுக்கு எதி­ரான போட்­டி­யிலும் ஐவரி கோஸ்ட் அணி வீரர்கள் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, உணர்ச்சி வசப்பட்ட ஐவரி கோஸ்ட் வீரர் செரி­ டெய் அழுது விட்டார்.இது குறித்து செரி டெய் கூறு­கை­யில்,‘‘ போட்டி துவங்கும் முன் எனது நாட்டு தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. அப்­போது தேசத்துக்காக பங்­கேற்­கிறேன் என்ற உணர்­வு ஏற்பட்டது. உடனே, அழுகை வந்­து­விட்­டது. ஏனெனில், இப்ப­டி­யொரு நாள் மீண்டும் கிடைக்குமா என்று தெரியாது அல்லவா,’’ என்றார்

0 Comment "கால்¬பந்து வீரர் செரி டெய் தேசிய கீதத்தை கேட்டவுடன் அப்படியே அழுகை !!"

Post a Comment