மர்மநோய் விஜயகாந்த் இன்று மலேசியா பயணம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடிக்கடி ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குச்சாவடி வாக்களிக்க முடியாமலும் தடுமாறினார். அவருக்கு அடிக்கடி கண்ணில் நீர்கசிவு ஏற்படுகின்றது. மோடியின் பதிவியேற்பு விழாவில் மோடியை கட்டியணைக்கும் போது தடுமாறி கீழே விழப்போனார்.
ஏற்கனவே மலேசியாவில் ரகசியமாக சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனாலும் அந்த நோய் குணமாகவில்லை. தற்பொழுது நோயின் தாகம் அதிகமானதால் விஜயகாந்த் அவர்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நோயின் தாக்கத்தை கட்டுபடுத்த மலேசியாவில் மீண்டும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தீவிர சிகிச்சை பெற இன்று காலை 11.45 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார்.
அவருடன் மனைவி பிரேமலதா சென்றார். இருவரையும் சென்னை விமான நிலையத்தில் இளைஞர் அணி மாநில தலைவர் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், பார்த்த சாரதி, அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

0 Comment "மர்மநோய் விஜயகாந்த் இன்று மலேசியா பயணம்"

Post a Comment