தந்தை திடீர் மறுப்பு :நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை


நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்தது என அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். . இது தொடர்பாக அவர் எர்ணாகுளம் பிஷப்புக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே, அவர் சிறு வயது முதலே இந்த சர்ச்சுக்குத்தான் சென்று வருகிறார். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த சர்ச்சில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7ம் தேதி சர்ச்சில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார். 

கத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. சர்ச்சில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது. சர்ச்சில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும்  இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. எனினும், திருமணத்திற்கு தடை ஏதுமில்லை என இருதரப்பினரும் கூறுகின்றனர்.

0 Comment "தந்தை திடீர் மறுப்பு :நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை "

Post a Comment