சவுதி மன்னரின் ரகசிய மனைவிக்கு ரூ.120 கோடி நஷ்டஈடு

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தவர் பாக்த்பின் அப்துல் அஷீஷ். இவர் கடந்த 2005–ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இவர் கடந்த 1968–ம் ஆண்டு லண்டனை சேர்ந்த வெள்ளைக்கார பெண் ஜனான் ஜார்ஜ் ஹாரிப் என்ற 19 வயது பெண்ணை திருமணம் செய்து அவருடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்தார்.
தற்போது அவருக்கு 65 வயது ஆகிறது. மன்னர் பாக்த் பின் அப்துல் அஷீஷ் மரணத்துக்கு பின் பணம் மற்றும் சொத்து தருவதாக அவரது மகன் இளவரசர் அப்துல் அஷீஷ் பின் பாக்த் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் மன்னர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியும் உதவி எதுவும் செய்யவில்லை. எனவே, லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு ரகசிய மனைவி ஆக வாழ்ந்த ஜனான் ஜார்ஜ் ஹர்ப்புக்கு ரூ.120 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

0 Comment "சவுதி மன்னரின் ரகசிய மனைவிக்கு ரூ.120 கோடி நஷ்டஈடு"

Post a Comment