சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!

சமீபகாலமாக சிம்புவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள், மற்றவர்கள் சொல்லும் விசயங்களை காது கொடுத்து கேட்கிறார். அவர்களின் கருத்துக்களுக்கும் மரியாதை கொடுக்கிறார். இதனால் சிம்புவிடம் இத்தனை பண்பு எங்கிருந்து எப்படி வந்தது என்று பலரும் ஆச்சர்யமாக அவரை பார்க்கின்றனர்.

ஆனால் சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு காரணமே ஆன்மீகம்தானாம். சமீபத்தில் இமயமலையிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வந்த பிறகுதான் சிம்பு இப்படி அடியோடு மாறிப்போயிருக்கிறாராம். அதனால்தான் தான் நடித்து வந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அஜீத் பட வேலைகளில் கெளதம்மேனன் இறங்கியபோதுகூட அவரிடம் கடினமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம் சிம்பு.

0 Comment "சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!"

Post a Comment