மேற்கு வங்காள ஆம்ஆத்மி பா.ஜ.கவுடன் இணைய முடிவு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி பெரும் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியில் சேர பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சி தங்களது தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளது. எனவே மத்தியில் ஆளும் அரசான பா.ஜ.கவோடு இணைய அம்மாநில ஆம்ஆத்மி முடிவு செய்துள்ளது. இத்தகவலை மேற்கு வங்காள மாநில பா.ஜ.க தலைவர் ராகுல் சின்ஹா
உறுதி செய்தர். மேலும் அவர் “ வேறு பல கட்சிகளை சார்ந்த தலைவர்களும் அங்களது கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளதாக” தெரிவித்தார். 

0 Comment "மேற்கு வங்காள ஆம்ஆத்மி பா.ஜ.கவுடன் இணைய முடிவு"

Post a Comment