நம்ம விஜயகாந்த் பிரதமராக ஆகி இருந்தால் எப்படி இருந்துருக்கும்.நகைச்சுவைக்கான பதிவு..

மோடிக்கு பதில் நம்ம விஜயகாந்த் பிரதமராக ஆகி இருந்தால் எப்படி இருந்துருக்கும்.
1. பம்பர விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவித்து இருப்பார்.
2. தலையில் டார்ச்லைட்டை கட்டிக்கொண்டு ஒத்தை ஆளாக மொத்த பாக்கிஸ்தான் எல்லையையும் காவல் காப்பார்.
3. மீறி இந்திய எல்லைக்குள் நுழைய முற்படும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை நோக்கி நாக்கை துருத்தி முஷ்டியை தூக்கி காட்டி பயமுறுத்தி பின்வாங்க வைத்துருப்பார்.
4. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எந்த நிருபர் கேள்வி கேட்டாலும் “நீயாடா
எனக்கு சம்பளம் கொடுக்குற” என்று திருப்பி கேட்டு மிரள வைத்து இருப்பார்.
5. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் “மன்னிப்பு” என்கிற அர்த்தம் வரும் வார்த்தையை அகராதியில் இருந்தே தூக்க உத்தரவு போடுவார்.
6. இந்தியாவுக்கு ஒரு கேப்டன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி கிரிக்கட், ஹாக்கி, கபடி போன்ற இந்திய அணிகளில் உள்ள கேப்டன் என்கிற பதவியை கேன்சல் செய்து உத்தரவு போட்டு இருப்பார்.
7. இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தன் உடம்பில் இருந்து மின்சாரம் எடுத்து கொள்ள மின்வாரியத்துக்கு அனுமதி கொடுத்து இருப்பார்.
இவ்வளவு திறமைவாய்ந்த ஒருவரை பிரதமராக அடையும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

0 Comment "நம்ம விஜயகாந்த் பிரதமராக ஆகி இருந்தால் எப்படி இருந்துருக்கும்.நகைச்சுவைக்கான பதிவு.."

Post a Comment