8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த விஷால்

இயக்குனர்  பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் விஷால், பார்த்திபனின் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை விஷால் காப்பாற்றுவதாக ஒரு காட்சி. இந்தக் காட்சியை சென்னையில் உள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்தில் படமாக்கினார் பார்த்திபன். நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதில் கருப்பு நிறம் கலந்த கழிவுநீரை நிரப்பினார்கள்.உடைந்த பிளாஷ்டிக் பொருட்கள், அழுகிய வாழை மரம், தென்னை மரம், தெர்மாகூல், குச்சிகள், ஆகியவற்றை அதில் மிதக்க விட்டு அசல் கழிவுநீர் தொட்டியாக அதனை மாற்றினார்கள்.
பின்னர் அந்த குளத்திற்குள் விஷாலை இறங்கச் செய்து படப்பிடிப்பு நடத்தினார்கள். விஷால் கழிவு நீரில் இறங்கி நடித்தார். அந்தக் காட்சி ஒரு நாள் முழுவதும் படமானது. சுமார் 8 மணிநேரம் விஷால் அந்த தண்ணீருக்குள் இருந்தார். பின்னர் படப்பிடிப்பு முடிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொண்டு சென்றார். இந்த காட்சியில் நடித்தற்காக விஷால் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. பார்த்திபன் நட்புக்காக இதனை செய்து கொடுத்தார்.

0 Comment " 8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த விஷால்"

Post a Comment