கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் மோடி; வெளிச்சம் போட்டு காட்டிய ஹபீஸ் சயீத்

கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் மோடியின் குழு உள்ளது என்று ஜமாத் உட் தாவா தலைவன் ஹபீஸ் சயீத் கூறியுள்ளான்.

கராச்சி விமான நிலையம் மீது தலீபான் தீவிரவாதிகள் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தினர். பதிலடியாக ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இரு தரப்பிலும் 28 பேர் கொல்லப்பட்டனர். விமானநிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தானின் தலீபான் தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் தெஹ்ரீக்--தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளநிலையில் ஜமாத் உட் தாவா இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழு உள்ளது. உண்மையான எதிரிகள் நாட்டுக்கு தெரியும் என்று தனது டுவிட்டர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளான்.

0 Comment "கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் மோடி; வெளிச்சம் போட்டு காட்டிய ஹபீஸ் சயீத்"

Post a Comment