நயன் ஆவேசம்– சிம்புவை கூட மன்னிப்பேன்; பிரபுதேவாவிற்கு மன்னிப்பே கிடையாது

வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் திடீரென அவர்கள் காதல் முறிந்து போனது. இருவரும் கண்ணீருடன் விடை பெற்றனர்.
பின்பு நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்தனர். இவர்கள் காதல் கல்யாணம் வரை சென்று இறுதியில் கல்யாணம் நடைபெறும் முன்பே நின்று போனது. தொடர் காதல் தோல்வியால் மனமுடைந்து போன நயன்தாரா ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்தார்.
சினிமாவில் இரண்டாவது ரவுண்டை தொடங்கிய நயன்தாரா நடிப்பில் மீண்டும் பிஸியாகினார். பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பழைய காதலரான சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தாரா. சிம்பு இந்து பையனாக நடிகின்றாராம். இந்த படத்தில் சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். அவர்கள் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொள்வது போன்று காட்சிகள் உள்ளதாம்.
நயன் – சிம்பு காதலர்களாக இருந்த போது இதே போன்று திருமணம் செய்து கொள்ள நினைத்தனராம். அவர் கனவு இந்த படத்தில் நனவாகும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் சிம்பு – நயன்தாரா இருவருமே இந்த காட்சியில் மேக் அப் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளானர்.
முதல் காதலரான சிம்புவுடன் மீண்டும் நடித்து வரும் நயன்தாரா, இரண்டாவது காதலரான பிரபுதேவாவின் திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டென்சன் ஆகியுள்ள நயன்தாரா, ‘எனது முதல் காதலரை கூட மன்னிப்பேன், ஆனால் இரண்டாவது காதலரை மன்னிக்கவே மாட்டேன். பிரபுதேவாவின் படத்தில் நான் ஒரு போதும் நடிக்கவே மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

0 Comment "நயன் ஆவேசம்– சிம்புவை கூட மன்னிப்பேன்; பிரபுதேவாவிற்கு மன்னிப்பே கிடையாது "

Post a Comment